Apr 8, 2026
Thisaigal NewsYouTube
பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை
தமிழ் பள்ளி

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

Share:

சைபர்ஜெயா, பிப்ரவரி.21-

சுற்றுச்சூழல் சார்ந்த பசுமைப் கண்டுபிடிப்புகளுக்காக மூன்று அனைத்துலகப் போட்டிகளில் முதலிடம் பிடித்து, நான்கு மலேசியத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பூச்சோங், கின்ராரா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 11 வயது ஆர்த்திஷா தீபன், ஆதிஷா மூர்த்தி, கேஷ்வினி அரவின் குமார் மற்றும் பூரணி விவேகன் ஆகிய நால்வரே இந்தச் சாதனையாளர்கள் ஆவர்

சைபர்ஜெயாவிலுள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்கின் சவால்' எனும் போட்டியில் தங்க விருதை வென்று இவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

தேசிய அறிவியல் மையம் மற்றும் சிரிம் (SIRIM) ஆதரவுடன் நடைபெற்ற 'உலகளாவிய ஸ்டெம் (STEM) புத்தாக்கப் ' போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் இவர்கள் வென்றனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற 'மலேசிய இளம் விஞ்ஞானிகள் அமைப்பு' போட்டியில் இவர்கள் தங்கம் வென்றனர். இதில் சுமார் 92 அணிகள் மற்றும் 1,000 பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் இவர்கள் தனித்து விளங்கினர்.

வெப்பமான காலநிலைக்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பானத்தை இவர்கள் அறிமுகப்படுத்தினர். இது உள்ளூர் செம்பருத்திப் பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதே வேளையில் பேங்காக் போட்டியில், வீட்டிலேயே மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கான மட்கும் தன்மையுடைய பொருட்களைப் பயன்படுத்திப் பசுமைப் புரட்சியை மேற்கொண்டனர்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தப் பசுமைத் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்த மாணவர்களின் வெற்றி, மலேசியாவின் இளம் தலைமுறையினரிடையே வளர்ந்து வரும் அறிவியல் ஆர்வத்தையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் காட்டுகிறது.

Related News

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்?  - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி  எச்சரிக்கை!

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்? - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி எச்சரிக்கை!

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது