மலேசியத் தமிழ் மொழி, நாட்டின் கலாச்சாரச் செழுமையை வலுப்படுத்தும் முக்கிய மொழிகளில் ஒன்றாகும் என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
தைப்பிங்கில் நடைபெற்ற 10-ஆவது தேசிய செந்தமிழ் விழாவை நிறைவு செய்து உரையாற்றிய துணை அமைச்சர், தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.


அத்துடன் வசதி குறைந்த மாணவர்களுக்கான ‘டியூஷன் மலேசியா மடானி’ திட்டம், பள்ளிகளுக்கான தளவாடப் பொருட்கள் மற்றும் குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு விவேக பலகை விநியோகம் போன்ற அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார். தமிழ்ப்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் இது போன்ற போட்டி நிகழ்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்ர்வது முக்கியமான ஒன்றாகும் என்று தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் கா வோ உறுதியளித்தார்.
மாநிலக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வோங் கா வோ பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.









