Jul 17, 2026
Thisaigal NewsYouTube
தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி
தமிழ் பள்ளி

தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி

Share:

மலேசியத் தமிழ் மொழி, நாட்டின் கலாச்சாரச் செழுமையை வலுப்படுத்தும் முக்கிய மொழிகளில் ஒன்றாகும் என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

தைப்பிங்கில் நடைபெற்ற 10-ஆவது தேசிய செந்தமிழ் விழாவை நிறைவு செய்து உரையாற்றிய துணை அமைச்சர், தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.

அத்துடன் வசதி குறைந்த மாணவர்களுக்கான ‘டியூஷன் மலேசியா மடானி’ திட்டம், பள்ளிகளுக்கான தளவாடப் பொருட்கள் மற்றும் குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு விவேக பலகை விநியோகம் போன்ற அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார். தமிழ்ப்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் இது போன்ற போட்டி நிகழ்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்ர்வது முக்கியமான ஒன்றாகும் என்று தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் கா வோ உறுதியளித்தார்.

மாநிலக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வோங் கா வோ பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.

Related News

தேசிய செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் ஒட்டுமொத்த சாம்பியன்; தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு முக்கிய தளம் என பழனி சுப்பையா பெருமிதம்

தேசிய செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் ஒட்டுமொத்த சாம்பியன்; தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு முக்கிய தளம் என பழனி சுப்பையா பெருமிதம்

உலகை வியக்க வைத்த மலேசியாவின் 8 வயது கணித ஜீனியஸ்! அபாகஸ் போட்டியில் வரலாற்றுச் சாதனை

உலகை வியக்க வைத்த மலேசியாவின் 8 வயது கணித ஜீனியஸ்! அபாகஸ் போட்டியில் வரலாற்றுச் சாதனை

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி உரிமை என்றும் பாதுகாக்கப்படும்: அடிக்கல் நாட்டு விழாவில் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதி

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி உரிமை என்றும் பாதுகாக்கப்படும்: அடிக்கல் நாட்டு விழாவில் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதி

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு-தனியார் கூட்டு முயற்சி அவசியம்:  அமைச்சர்த பட்லினா சீடேக் கூறுகிறார்

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு-தனியார் கூட்டு முயற்சி அவசியம்: அமைச்சர்த பட்லினா சீடேக் கூறுகிறார்

லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம்: கல்வி அமைச்சர் அடிக்கல் நாட்டினர்

லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம்: கல்வி அமைச்சர் அடிக்கல் நாட்டினர்

முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவின் நோக்கம் .

முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவின் நோக்கம் .