பங்சார், ஜாலான் தெலாவியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு போலித் துப்பாக்கியைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
27 மற்றும் 33 வயதுடைய இரு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை இரவு 11.45 மணியளவில் சிலாங்கூர், கிள்ளான் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
ஒரு தோட்டாவுடன் கூடிய கைத்துப்பாக்கி மற்றும் ஒரு போலித் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் முதல் நபருக்கு 5 குற்றப் பதிவுகளும், இரண்டாவது நபருக்கு 17 குற்றப் பதிவுகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சூஸ் தெரிவித்தார்.








