Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு
தமிழ் பள்ளி

தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு

Share:

மலேசியாவில் உள்ள சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டமான PPKI கீழ் பயிலும் மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு முதல் சீனம் மற்றும் தமிழ் மொழிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மலாக்கா, ஆலோர்காஜாவில் நேற்று புதன்கிழமை தொடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான மடானி கல்வி சீர்த்திருத்தை நோக்கி, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான டிஜிட்டல் தலைமைத்துவ கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை அமைச்சர் வோங் கா வோ இதனைத் தெரிவித்தார்.

2027-ஆம் ஆண்டுக்கான புதிய தேசியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறப்புக் கல்வி மாணவர்கள் பிற்காலத்தில் சாதாரண வகுப்பு மாணவர்களுடன் இணைந்து பயிலும்போது, அவர்களுக்குத் தாய்மொழி அறிவு அவசியமாகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டு ஸ்மார்ட் டிவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு மித்ரா அமைப்பின் மூலம் 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு இத்தகைய நவீன கல்விச் சாதனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வோங் கா வோ சுட்டிக்காட்டினார்.

Related News

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு

தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி

தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி

தேசிய செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் ஒட்டுமொத்த சாம்பியன்; தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு முக்கிய தளம் என பழனி சுப்பையா பெருமிதம்

தேசிய செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் ஒட்டுமொத்த சாம்பியன்; தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு முக்கிய தளம் என பழனி சுப்பையா பெருமிதம்