Apr 13, 2026
Thisaigal NewsYouTube
பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்
தமிழ் பள்ளி

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

Share:

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்காக மலேசியத் தமிழ் நெறிக் கழகம் மற்றும் பள்ளியின் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்திய ‘புதையல் வேட்டை’ போட்டி இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு விளக்கக் கூட்டத்துடன் தொடங்கிய நிகழ்வை, 8 மணிக்கு கோலசிலாங்கூர் எம்.பி. டாக்டர் சூல்கிப்லியின் பிரதிநிதி சிவபாலன், தலைமையாசிரியர் திருமதி பெண்ணரசி மற்றும் கனல் வீரன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதில் 47 மகிழுந்துகளில் மொத்தம் 188 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இப்பயணம், பெஸ்தாரி ஜெயாவிலிருந்து தொடங்கி ஈஜோக் மற்றும் கோலா சிலாங்கூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. சாலைக் குறியீடுகளைக் கவனித்து சவாலான வினாக்களுக்கு விடைகாணும் வகையில் இந்தப் போட்டி அமைந்திருந்தது.

வெற்றியாளர்கள் விவரம்:

• முதலிடம்: குழு "பீனிக்ஸ்" (இராஜேந்திரன், கீதா) – RM 1,500 பரிசு.

• இரண்டாமிடம்: குழு "குலுலெஸ்" (கோகிலா, தவகுமார், மலர், சுமித்ரா) – RM 1,000 பரிசு.

• மூன்றாமிடம்: குழு "திவின் துர்போ" (பிரகாஷ், ரூபிண்டர், ஆர்யன், ஜெய்வன்) – RM 700 பரிசு.

தலைமையாசிரியர் திருமதி பெண்ணரசி பேசுகையில், "பங்கேற்பாளர்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கே வழங்கப்பட்டன" எனக் கூறி நன்றியைத் தெரிவித்தார். தமிழ் நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன், இது தங்களின் 3-வது நிதி திரட்டும் முயற்சி என்றும், மற்ற பள்ளிகளுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்?  - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி  எச்சரிக்கை!

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்? - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி எச்சரிக்கை!

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை