Aug 24, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பாவ் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு யுஐடிஎம் மாணவிகள் உயிரிழந்தனர்
தமிழ் பள்ளி

ரெம்பாவ் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு யுஐடிஎம் மாணவிகள் உயிரிழந்தனர்

Share:

ரெம்பாவ், ஜனவரி.05-

நெகிரி செம்பிலான் மாநிலம் ரெம்பாவ் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், யுஐடிஎம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் உயிரிழந்தனர்.

பெக்கான் லுபோக் சீனா பகுதியில், நேற்று மாலை 4 மணியளவில் நடந்த இவ்விபத்தில், 19 வயதான Ismawanie Husna Ismail மற்றும் Nur Ain Zulaisya Zahrain ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

யுஐடிஎம் பல்கலைக்கழகத்தில் இவர்கள் இருவரும் டிப்ளோமா படித்து வந்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் வானிலை சீராக இருந்த போதும் கூட, வளைவு ஒன்றில் அவர்கள் செலுத்திய யமாஹா NVX வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதாக, ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹசானி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இருவரின் உடலும் சவப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு