Aug 24, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!
தமிழ் பள்ளி

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.11-

கெடா மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு பள்ளித் தொடக்கத்தின் போது, அங்குள்ள 60 தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 762 மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் பதிந்துள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையான 29 ஆயிரத்து 4-இல், தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதியாக அமைந்துள்ளது.

அதே வேளையில், முறையான பள்ளித் தொடக்கத்திற்கு முன்னதாகவே 580 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் தங்களின் பாலர் பள்ளி கல்வியைத் தொடங்கியிருப்பது வருங்காலத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். ஒட்டுமொத்தமாக கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளில் 2026இல் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை 5 ஆயிரத்து 822 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என கெடா மாநிலக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 2025இல் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 923 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டு அது சரிவைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு