Jun 25, 2026
Thisaigal NewsYouTube
வாங் கெலியான் சம்பவம்: 5 தாய்லாந்துப் பிரஜைகளுக்குத் தலா 5 ஆண்டு சிறை
தமிழ் பள்ளி

வாங் கெலியான் சம்பவம்: 5 தாய்லாந்துப் பிரஜைகளுக்குத் தலா 5 ஆண்டு சிறை

Share:

கங்கார், ஜனவரி.07-

2015-ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய பெர்லிஸ், வாங் கெலியானில் (Wang Kelian) கண்டறியப்பட்ட மனிதக் கடத்தல் முகாம்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கில், 5 தாய்லாந்து பிரஜைகளுக்கு இன்று கங்கார் உயர் நீதிமன்றம் தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

2015-ஆம் ஆண்டு மே மாதம், தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகிலுள்ள வாங் கெலியான் காடுகளில் 28 தற்காலிக முகாம்களும், 139 புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டதும், பலர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஐந்து பேரும் மலேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டு தற்போது தண்டனை பெற்றுள்ளனர்.

இவ்வழக்கு பெர்லிஸ், கங்கார் உயர் நீதிமன்றத்தில் Abazafree Abbas முன்னிலையில் நடைபெற்றது.

Related News

இரட்டைப் பிரிவு மாணவர் சேர்க்கை: தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமப்பகிர்வு தேவை – வெற்றிவேலன்

இரட்டைப் பிரிவு மாணவர் சேர்க்கை: தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமப்பகிர்வு தேவை – வெற்றிவேலன்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின