Feb 23, 2026
Thisaigal NewsYouTube
வாங் கெலியான் சம்பவம்: 5 தாய்லாந்துப் பிரஜைகளுக்குத் தலா 5 ஆண்டு சிறை
தமிழ் பள்ளி

வாங் கெலியான் சம்பவம்: 5 தாய்லாந்துப் பிரஜைகளுக்குத் தலா 5 ஆண்டு சிறை

Share:

கங்கார், ஜனவரி.07-

2015-ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய பெர்லிஸ், வாங் கெலியானில் (Wang Kelian) கண்டறியப்பட்ட மனிதக் கடத்தல் முகாம்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கில், 5 தாய்லாந்து பிரஜைகளுக்கு இன்று கங்கார் உயர் நீதிமன்றம் தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

2015-ஆம் ஆண்டு மே மாதம், தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகிலுள்ள வாங் கெலியான் காடுகளில் 28 தற்காலிக முகாம்களும், 139 புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டதும், பலர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஐந்து பேரும் மலேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டு தற்போது தண்டனை பெற்றுள்ளனர்.

இவ்வழக்கு பெர்லிஸ், கங்கார் உயர் நீதிமன்றத்தில் Abazafree Abbas முன்னிலையில் நடைபெற்றது.

Related News

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

மத்திய அரசின் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறும்

மத்திய அரசின் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறும்