Aug 24, 2026
Thisaigal NewsYouTube
வாங் கெலியான் சம்பவம்: 5 தாய்லாந்துப் பிரஜைகளுக்குத் தலா 5 ஆண்டு சிறை
தமிழ் பள்ளி

வாங் கெலியான் சம்பவம்: 5 தாய்லாந்துப் பிரஜைகளுக்குத் தலா 5 ஆண்டு சிறை

Share:

கங்கார், ஜனவரி.07-

2015-ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய பெர்லிஸ், வாங் கெலியானில் (Wang Kelian) கண்டறியப்பட்ட மனிதக் கடத்தல் முகாம்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கில், 5 தாய்லாந்து பிரஜைகளுக்கு இன்று கங்கார் உயர் நீதிமன்றம் தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

2015-ஆம் ஆண்டு மே மாதம், தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகிலுள்ள வாங் கெலியான் காடுகளில் 28 தற்காலிக முகாம்களும், 139 புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டதும், பலர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஐந்து பேரும் மலேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டு தற்போது தண்டனை பெற்றுள்ளனர்.

இவ்வழக்கு பெர்லிஸ், கங்கார் உயர் நீதிமன்றத்தில் Abazafree Abbas முன்னிலையில் நடைபெற்றது.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு