Apr 22, 2026
Thisaigal NewsYouTube
18 தமிழ்ப்பள்ளிகளுக்கு கெடா மாநில அரசாங்கம் வெ. 1 லட்சம் மானியம்
தமிழ் பள்ளி

18 தமிழ்ப்பள்ளிகளுக்கு கெடா மாநில அரசாங்கம் வெ. 1 லட்சம் மானியம்

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.03-

கெடா மாநில அரசாங்கம், மாநிலத்தில் உள்ள 18 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரிங்கிட் மானியத்தை வழங்கிருப்பததாக கெடா மாநில சீனர், இந்தியர், சயாமியர் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் ஆட்சிக் குழு உறுப்பினரும் கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் சியா ஸென் தெரிவித்தார்.

கெடா மாநில அளவிலான தீபாவளி பண்டிகையின் திறந்த இல்ல உபசரிப்பு சுங்கை பட்டாணி ஸ்வரணாபூமி மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது இந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோ சிறப்புப் பிரமுகராகக் கலந்து சிறப்பித்தார் .

வோங் சியா ஸென் தமது சிறப்புரையில், கெடா மாநில அரசாங்கம், அனைத்து இன மக்களையும் சம நிலையில் கவனிக்கப்பட்டு ஒவ்வொரு இனத்தவரின் கலாச்சாரம் , பாரம்பரியத்தை மதித்து அவரவர் பண்டிகைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதற்கு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஓர் உதாரணம் என்றார். இம்மாநிலத்தில் எல்லா இன மக்களையும் அவர்களின் கலாச்சார பின்பற்றிய வாழ்கின்றனர். அதனை எவரும் தடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் கெடா மாநிலத்திலுள்ள 18 தமிழ்ப்பள்ளிகளின் சிறு சிறு மேம்பாட்டிற்காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பள்ளிகளின் விண்ணப்பத்திற்கு ஏற்ப மானியம் வழங்கப்பட்டிருப்பதாக வோங் சியா ஸென் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் 5 ஆதரவற்ற சிறார்கள் இல்லங்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.

Related News

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம்

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி மேம்பாடு: பேரா மாநில அரசு 40,000 ரிங்கிட் நிதி உதவி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்?  - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி  எச்சரிக்கை!

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்? - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி எச்சரிக்கை!

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு