Aug 24, 2026
Thisaigal NewsYouTube
தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படாது: அரசாங்கம் உத்தரவாதம்
தமிழ் பள்ளி

தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படாது: அரசாங்கம் உத்தரவாதம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.09-

மடானி அரசாங்கத்தின் கீழ் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் உட்பட எந்தவொரு தாய்மொழிப் பள்ளியும் மூடப்படாது என்று கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

நாட்டில் தமிழ், சீனம் உட்பட தாய்மொழிப் பள்ளிகளின் நிலைப்பாடு குறித்து 1996 கல்விச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து கேள்விக்குட்படுத்தவோ அல்லது சர்ச்சை செய்யவோ முடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இன்று பிற்பகலில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு Smart Board எனும் திறன் பலகை வழங்கும் நிகழ்வில் திடீர் வருகை புரிந்த கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.

தாம் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் தமிழ், சீனப்பள்ளிகள் உட்பட தாய்மொழிப் பள்ளிகள், கல்விச் சட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதை தாமும், கல்வி துணை அமைச்சர் வொங் கா வோவும் வலியுறுத்தி வருவதை ஃபாட்லீனா சுட்டிக் காட்டினார்.

சில நேரங்களில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் என்று வைரலான கதைகள் உள்ளன. ஆனால், எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்பதற்கு நிகழ்விற்கு தலைமையேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன், மகளிர் மற்றும் தாய்மார்கள் முன்னிலையில் தாம் உறுதி கூறுவதாக ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு