Mar 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் ஜூலை 1 முதல் குப்பை வீசுவதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை
தமிழ் பள்ளி

பினாங்கில் ஜூலை 1 முதல் குப்பை வீசுவதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.02-

நாட்டில் அமலில் உள்ள கடுமையான குப்பை வீசுவதை தடுக்கும் சட்டங்களானது, பினாங்கு மாநிலத்தில், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

செபராங் பிறை மாநகர் மன்றமும், பினாங்கு தீவு மாநகர் மன்றமும், தேவையான தயார் நிலைகளை உறுதிச் செய்ய வேண்டும் என்பதற்காக, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட இம்முடிவானது, அடுத்த 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக மாநில ஊராட்சிக் குழுத் தலைவர் H'ng Mooi Lye தெரிவித்துள்ளார்.

விதிகளை மீறுவோருக்கு ஏற்ப, அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பிற விவகாரங்களை ஆய்வு செய்ய, இரு நகர் மன்றங்களும், தலா ஒரு பணிக் குழுவை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமலாக்க நடவடிக்கையின் படி, திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் 2007, பிரிவு 672 உட்பட பல சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவுள்ளன.

முதல் தடவை குற்றத்திற்கு 2,000 ரிங்கிட் வரை அபராதமும், 12 மணி நேர கட்டாயச் சமூகச் சேவையும் விதிக்கப்படவுள்ளது.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

பினாங்கில் ஜூலை 1-முதல் குப்பை வீசுவதற்கு எதிராக கடும் நட... | Thisaigal News