Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது
தமிழ் பள்ளி

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், கம்போங் பண்டான் தேசிய வகை தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பண்டான் மாஸ் 2 அடுக்குமாடி குடியிருப்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் B. நவேந்திரன் தலைமையில் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பார்த்திபன் இராமச்சந்திரனின் சிறப்பு வருகையுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டெடுத்து பகிர்ந்து கொள்வதுடன், பள்ளித் தோழமையை மீண்டும் புதுப்பித்து, ஒருவருக்கொருவர் தொடர்பையும் நட்புறவையும் தொடர்ந்து பேணும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக, 1993ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான நவேந்திரன் தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் பள்ளித் தோழர்களை ஒரே இடத்தில் சந்தித்து, தங்களது இளமைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக நவேந்திரன் விவரித்தார்.

1965ஆம் ஆண்டில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கூட இச்சந்திப்பில் கலந்து கொண்டது தமக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பள்ளித் தோழமை தொடர்ந்து நீடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், 2004ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்று தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ரூபன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு, நீண்ட காலத்துக்குப் பிறகு பழைய நட்பு வட்டாரங்களை மீண்டும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிப்பதாக 1993ஆம் ஆண்டு கம்போங் பண்டான் பள்ளியில் பயின்ற கேத்ரின் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

தாம் 2013 ஆம் ஆண்டு வரை இப்பள்ளியில் பயின்றிருந்தாலும், தமக்கு முன்பு இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பழைய நினைவுகளைக் கேட்கும்போது, தமது பள்ளிப் பருவ அனுபவங்களையும் அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக திவ்யாஸ்ரீ ரகுநாதன் தெரிவித்தார்.

பழைய மாணவர்கள் ஒன்றுக்கூடியது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 1987 இல் பயின்ற முன்னாள் மாணவர் முனியாண்டி பொன்னுசாமி பரிந்துரை செய்தார்.

ஆண்டுகள் பல கடந்தாலும், பள்ளிப் பருவ நட்புகளும் நினைவுகளும் மனதைவிட்டு மறைவதில்லை. கம்போங் பாண்டான் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, காலத்தால் அழியாத அந்த இனிய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து, நட்பின் பாசத்தை நெஞ்சில் நிறைத்துச் சென்ற ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

Related News

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு