கோலாலம்பூரில் உள்ள லாட்டரி கடை ஒன்றின் வெளியே நேற்று, 62 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்குவதாக கேப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் “அதிர்ச்சியூட்டும் கொடூரச் செயல்” எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பெண், அந்த லாட்டரி கடையில் பணியாளராக வேலை செய்து வந்தவர் என செந்துல் மாவட்ட துணை போலீஸ் தலைவர் ஜாஸ்னி ஸ்ல்பா தெரிவித்துள்ளார்.
அவரது உடலில் சுமார் 50 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.








