பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் மசோதா, மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்குத் தயாராக இருப்பதாக சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டுவருவதா என்பதை, அவைத் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்வார் என அவர் கூறினார்.
இந்த மசோதா கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதை உள்ளடக்கியதால், நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, மார்ச் 2ஆம் தேதி இரண்டாவது வாசிப்பின்போது தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது








