Sep 3, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்
தமிழ் பள்ளி

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

Share:

பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் மசோதா, மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்குத் தயாராக இருப்பதாக சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டுவருவதா என்பதை, அவைத் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்வார் என அவர் கூறினார்.

இந்த மசோதா கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதை உள்ளடக்கியதால், நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, மார்ச் 2ஆம் தேதி இரண்டாவது வாசிப்பின்போது தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு