Jun 25, 2026
Thisaigal NewsYouTube
நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தமிழ் பள்ளி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையொன்றில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்ற அந்த சந்தேக நபர் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வாடிக்கையாளர் யாரும் அக்கடையில் இல்லை. அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆடவர் அங்கிருந்த பாதுகாவலருடன் கைகலைப்பில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்ட அப்பாதுகாவலரின் சக பணியாளர், இரு முறை சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவ்வாடவர் பின்னர் மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவ்வேளையில், நகைகள் ஏதும் களவாடப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்