சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையொன்றில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்ற அந்த சந்தேக நபர் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வாடிக்கையாளர் யாரும் அக்கடையில் இல்லை. அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆடவர் அங்கிருந்த பாதுகாவலருடன் கைகலைப்பில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்ட அப்பாதுகாவலரின் சக பணியாளர், இரு முறை சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவ்வாடவர் பின்னர் மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவ்வேளையில், நகைகள் ஏதும் களவாடப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








