Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தமிழ் பள்ளி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையொன்றில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்ற அந்த சந்தேக நபர் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வாடிக்கையாளர் யாரும் அக்கடையில் இல்லை. அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆடவர் அங்கிருந்த பாதுகாவலருடன் கைகலைப்பில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்ட அப்பாதுகாவலரின் சக பணியாளர், இரு முறை சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவ்வாடவர் பின்னர் மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவ்வேளையில், நகைகள் ஏதும் களவாடப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்?  - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி  எச்சரிக்கை!

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்? - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி எச்சரிக்கை!

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து