Aug 24, 2026
Thisaigal NewsYouTube
நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தமிழ் பள்ளி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையொன்றில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்ற அந்த சந்தேக நபர் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வாடிக்கையாளர் யாரும் அக்கடையில் இல்லை. அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆடவர் அங்கிருந்த பாதுகாவலருடன் கைகலைப்பில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்ட அப்பாதுகாவலரின் சக பணியாளர், இரு முறை சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவ்வாடவர் பின்னர் மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவ்வேளையில், நகைகள் ஏதும் களவாடப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு