Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு
தமிழ் பள்ளி

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

Share:

பேராக் மாநிலம் தஞ்சோங் மாலிமில் உள்ள தோட்டப்புற தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள Drone அறை முயற்சிக்கு மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோ சாங் லி காங் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

நேற்று எஸ்.ஜே.கே.டி. லாடாங் கத்தோயாங் தமிழ்ப் பள்ளியில் ட்ரோன் அறையை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் சாங் லி காங், ட்ரோன் தொழில்நுட்பம் மாணவர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான கல்வியைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கும் தனித்துவமான திறன் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரோன்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஈர்ப்பும், ஊடாடும் தன்மையும் கொண்ட கற்றல் முறையையும் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணுகுமுறை மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பள்ளி மாணவர்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதோடு, அதனுடன் தொடர்புடைய அறிவை ஆராயும் ஆர்வத்தையும் வளர்க்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பள்ளி மட்டத்திலேயே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை’

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை’

பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் சாதனை

பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் சாதனை

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருடன் 413 மாணவர்கள்  பங்கேடுத்தனர்.

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருடன் 413 மாணவர்கள் பங்கேடுத்தனர்.

ஈப்போ சென்ட்ரல் திட்டம்: தமிழ்ப்பள்ளி, ஆலயங்கள் பாதுகாப்பு - டத்தோ சிவநேசன் உறுதி

ஈப்போ சென்ட்ரல் திட்டம்: தமிழ்ப்பள்ளி, ஆலயங்கள் பாதுகாப்பு - டத்தோ சிவநேசன் உறுதி