Jun 22, 2026
Thisaigal NewsYouTube
109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்
தமிழ் பள்ளி

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

Share:

பேரா மாநில தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 109 ஆண்டுகாலமாக தனியார் நிலத்தில் இருந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, தற்போது பள்ளி வாரியக் குழுவான LPS பெயரில் அதிகாரப்பூர்வ தனி நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழிகாட்டலில், இந்த நில உரிமை மாற்ற முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்து வெற்றி காணச் செய்தவர் பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் ஆவார்.

இத்தொகுதியில் உள்ள சத்தியசீலா, கிளேபாங் மற்றும் சங்காட் கிண்டிங் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் நிலப்பட்டா பெற்றுள்ள வேளையில், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் நிலப்பட்டா பெற தொடர்ந்து முயன்று வருவதாக டத்தோ சுரேஷ்குமார் கூறினார்.

மேலும், சங்காட் கிண்டிங் பள்ளிக்கு புதிய விளையாட்டு மைதான நில ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. பேராவில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமைகளும் எல்.பி.எஸ் பெயருக்கு மாற்றப்பட்டால் மட்டுமே அவற்றின் எதிர்காலம் மற்றும் கல்வி வளர்ச்சி பாதுகாப்பாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். மகாராணி மற்றும் வாரியத் தலைவர் சேகர் ராமையா ஆகியோர் நெகிழ்ச்சியுடன் பேசினர்.

பல ஆண்டு மைதானக் குறையைத் தீர்த்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், டத்தோ சுரேஷ்குமாருக்கும் நன்றி கூறிய அவர்கள், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கு 17 பேர் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். பள்ளி நிர்வாகமும் சமூகமும் ஒன்றுபட்டு உழைத்தால், மற்ற தோட்டப்புறப் பள்ளிகளும் இதேபோல் தனி கிராண்ட் பெற முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Related News

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை’

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை’

பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் சாதனை

பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் சாதனை