Aug 24, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த அந்த  24 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு வாழ்த்து
தமிழ் பள்ளி

தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த அந்த 24 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு வாழ்த்து

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.26-

கடந்த நவம்பர் மாதம் இறுதியில், தைவான், தைப்பேவில் நடைபெற்ற அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த பினாங்கு, தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

சத்திஸ் குமரன், கார்த்திகேயன் உத்தமசீலன், திமோதி நாதன் திவ்ய நாதன், நிஷான் ரவீந்திரன், முனீஸ்வரன் சரவணன், ருக்கேஸ் ராவ் கலையரசு, ஐஸ்வன் அர்வீன், சர்ச்சின் காளிதாசன், குகன் கமலநாதன், விமல்ராஜ் ஜெயகுமார், தான்வீன் சுகுமாறன், சத்தீஸ் குமரன், ஆரன் அர்வீன், யாழினி தயாளன், பவீந்திரன் லிங்கேஸ்வரன், இந்துஜா கனகநாயுடு, யாஷ்வன் தேவேந்திரன், ஸ்ரீசாஸ்தா சுப்பிரமணிய பாரதி, லக்‌ஷமண நாராயண பிள்ளை கோபாலகிருஷ்ணன், ஷேசன் வேலன், சஜீத் செல்வம், அபிநய ஸ்ரீ ஸ்ரீகாந்த், புவேந்திர குமார் ஜெயகுமார் முதலிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

மலேசியாவிற்கும், நாட்டு மக்களுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்ந்த 24 மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது ஏன் என்று மக்களின் எண்ண அலைகளைத் திசைகள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அதன் எதிரொலியாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அந்த 24 மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு