Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மூவாயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு
தமிழ் பள்ளி

பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மூவாயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு

Share:

ரந்தாவ், மார்ச்.27-

மாண்புமிகு திரு. வீரப்பன் சுப்ரமணியம் கடந்த 25 ஆம் தேதி பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 51 ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்பள்ளிக்கு மூவாயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


அக்கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய ரெப்பா சட்ட மன்ற உறுப்பினருமான வீரப்பன், பள்ளியில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொள்ளும் பள்ளி மற்றும் பெற்றோர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டிருந்தாலும், பள்ளி மற்றும் அதன் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றாரவர்.



இவ்வேளையில் பொது உயர்க்கல்விக் கழகத்திற்கான ஆயிரம் ரிங்கிட் உதவிநிதி, நெகிரி செம்பிலான் அறக்கட்டளையின் மடிக்கணினி உதவி, பள்ளி பராமரிப்பு நிதி மற்றும் பள்ளி நிதி உள்ளிட்ட கல்வி தொடர்பான நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் முன்முயற்சிகளையும் வீரப்பன் விளக்கினார். அதோடு தாய்மொழியுடன் தேசிய மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

பள்ளி பராமரிப்புக்காக கல்வியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் மூலம் நிதியுதவி பெறுவதற்கு வீரப்பன் உறுதியளித்தார். அக்கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.எஸ்.குணசீலன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி.கே.கவிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

Related News

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் 2027-ல் நிறைவு பெறும்: கோபிந்த் சிங் டியோ வரவேற்பு