Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலத்தை மக்கள் பார்வையிட்டனர்
தமிழ் பள்ளி

பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலத்தை மக்கள் பார்வையிட்டனர்

Share:

சுங்கை பூலோ, மே 23-

சுங்கை பூலோ, RRI தோட்டத் தமிழ்ப்பள்ளியை இடம் மாற்றம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலத்தை பள்ளியின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் RRI தோட்ட முன்னாள் மண்ணின் மைந்தர்கள் நேற்று பார்வையிட்டனர்.

RRI தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மேலாளர் வாரியத்தின் தலைவர் முனுசாமி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோரால் அந்த 6 ஏக்கர் நிலம் வேண்டாம் என்று கூறி, சிலாங்கூர் கல்வி இலாகாவிற்கு கடிதம் எழுதப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாகவிருக்கும் அந்த 6 ஏக்கர் நிலத்தை தற்காக்கும் போராட்டத்தில் RRI தோட்ட முன்னாள் மண்ணின் மைந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது RRI தோட்ட தமிழ்ப்பள்ளி வீற்றிருக்கும் இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் அந்த 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. 5 முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு மொத்தம் 535 ஏக்கர் நிலப்பகுதியை , Kwasa Land Sdn. Bhd. என்ற நிறுவனம் தற்போது மேம்படுத்தி வருகிறது..

பள்ளியின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவிருக்கும் நிலப்பகுதிக்கு அருகாமைமையிலேயே LRT ரயில் நிலையம் உள்ளது. தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF தலைமையகம், இடைநிலைப்பள்ளி உட்பட்ட பலதரப்பட்ட வசதிகளை கொண்ட மேம்பாடுகளை Kwasa Land Sdn. Bhd. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

RRI தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட இந்த 6 ஏக்கர் நிலம் கைநழுவிவிடக்கூடாது என்பதற்காக அதனை தற்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மண்ணின் மைந்தர்கள், / பள்ளி பெற்றோர்கள் அந்த புதிய நிலப்பகுதியை பார்வையிடுவதற்கு ஒவ்வொரு குழுவினராக நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.
படவிளக்கம்

Related News

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்