Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தமிழ் பள்ளி

சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மெய்நிகர் ஓட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

Share:

சிம்பாங் மோரிப், பிப்.12-

கடந்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 10 முதல் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 5 கி.மீ மெய்நிகர் ஓட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 2025/2026 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர், மாணவர்களுக்கு உடல் நலம், விளையாட்டு போன்றவற்றில் தொடர் ஈடுபாடு இருப்பதை உறுதி செய்ய இந்த மெய்நிகர் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கு கொண்ட மாணவர்கள் தாங்கள் ஓட இருக்கும் 5 கிலோ மீட்டர் வழித்தடத்தை அவர்களே முடிவு செய்து, பெற்றோர் கண்காணிப்பில் ஓடுவார்கள். ஓடும் தூரம், எடுத்துக் கொண்ட நேரம், ஓடிய வழித்தடம் ஆகியவை ஒரு செயலி வாயிலாக பதிவு செய்யப்படும். அந்தப் பதிவை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் சேகரித்து மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும்.

இந்த மெய்நிகர் ஓட்டம் மாணவர்களிடையே உடல் நலத்தை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆர்வத்தையும் தூண்டியது. பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த வாரம், பள்ளியில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும். இந்த புதுமையான ஓட்டம் மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது, மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மெய்நிகர் ஓட்டங்களில் பங்கேற்க அவர்களை ஊக்குவித்தது.

Related News

இரட்டைப் பிரிவு மாணவர் சேர்க்கை: தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமப்பகிர்வு தேவை – வெற்றிவேலன்

இரட்டைப் பிரிவு மாணவர் சேர்க்கை: தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமப்பகிர்வு தேவை – வெற்றிவேலன்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின