Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தமிழ் பள்ளி

பேரா மாநிலத்தின் பணி ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் சங்கத்தின் சமுகப் பணி

Share:

ஈப்போ, பிப்.15-

பேரா மாநிலத்தில் சமூகப் பணியை மேற்கொண்டு வரும் பேரா பணி ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரா மாநில ல் தமிழ்ப்பள்ளிகளில் வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஈப்போவில் உள்ள அரசினர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சங்கம் தொடக்கத்தில சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் சேவை வழங்கி வந்தது.

பின்னர் சமூகப் பணியில் ஈடுபட உந்துதல் ஏற்படுத்தப்பட்டதால் தொடக்கமாக தமிழ்ப்பள்ளியில் படிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ பள்ளிச் சீருடைகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கும் பணியைத் தொடங்கியது்

தாங்கள் வழங்கி வரும் உதவி திட்டங்களுக்கு உந்துதல் ஏற்படுத்தும் வகையில் சுவாரா ரக்யாட் மலேசியா அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ தியாகராஜா பஞ்சட்சரம் மூலம் வழி இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளியில பயின்று வரும் வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, புத்தகப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக பேரா பணி ஓய்வு பெற்ற போலீஸ்கார்கள் சங்கத்தின் தலைவர் புவனேஸ்வரன் கணேசன் கூறினார்.

வசதி குறைந்த மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க பல திட்டங்களை தமது சங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் பேசினார்

டத்தோஸ்ரீ தியாகராஜா இந்திய சமுகம் எதிர்காலத்தில் சிறபுடைய இயக்கமாக விளங்க கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு தமது ஆதரவு தொடரும் என்றார்.

பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்பள்ளிகளில் 117 பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை மற்றும் புத்தகப்பை அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றார்.

Related News

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலம்: 20.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இருபெரும் திட்டங்கள் அமோகத் தொடக்கம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

தஞ்சோங் மாலிம் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்ட ட்ரோன் அறை - அமைச்சர் சாங் லி காங் பாராட்டு

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட்  தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

பேராவில் 28 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற காற்பந்துப் போட்டி: லாடாங் கேசூட், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்