ஆகஸ்ட் 30-
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கப் பதக்க நம்பிக்கை; தகுதிச் சுற்றில் நூலிழையில் உலகச் சாதனையை தவறவிட்ட ஷீத்தல் தேவி; கைகள் இல்லாமல் வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை
பாரா ஒலிம்பிக்கின் பெண்களுக்கான தனிநபர் கூட்டுப் போட்டியில் இந்தியாவின் கைகளற்ற வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி நூலிழையில் உலக சாதனையை தவறவிட்டார்.
பாரா ஒலிம்பிக் வில்வித்தை போட்டி தரவரிசைச் சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி உலக சாதனை படைக்க இருந்தார். ஷீத்தல் தேவி, பாரா விளையாட்டுகளின் சாதனை மற்றும் உலக சாதனையை முறியடித்து 703 புள்ளிகளைப் பெற்றார். ஆனால் அதே தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை 704 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார்.
இருவரும் ஜெசிகா ஸ்ட்ரெட்டன் (694 புள்ளிகள்) மற்றும் ஃபோப் பேட்டர்சன் (698 புள்ளிகள்) ஆகியோரின் முந்தைய சாதனைகளை முறியடித்தனர்.