Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரின் 60 ஆவது தேசிய தினம்: ஒற்றுமை மிளிர வேண்டும்
உலகச் செய்திகள்

சிங்கப்பூரின் 60 ஆவது தேசிய தினம்: ஒற்றுமை மிளிர வேண்டும்

Share:

சிங்கப்பூர், ஆகஸ்ட்.09-

அண்டை நாடான சிங்கப்பூரின் 60 ஆவது தேசிய தினம் இன்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர் தனிச் சிறப்புடன் திகழ ஒற்றுமை, உறுதிப்பாடு, செயல் ஆகிய அனைத்தும் முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மாற்றங்கள் அதிவேகமாகவே இருக்கும் என்றும், சிரமமாகக்கூட சில சமயங்களில் இருக்கும் என்றும் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், எவரும் தனித்து அந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்தார்.

கடந்த 60 ஆண்டுகளைப் போல, அரசாங்கம் சிங்கப்பூர் மக்களுக்குத் துணை நிற்கும். பின்தங்கியுள்ள ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன்னம்பிக்கையுடன் போராடத் துணை நிற்போம் என்று லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

எதிர்வரும் சிரமமான சூழலைக் கண்டு மனந்தளரப் போவதில்லை என்றும் புதிய சவால்களைத் தனித்துவமான வழியில் எதிர்கொள்வோம் என்றும் நேற்றிரவு ஆற்றிய சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துச் செய்தியில் லாரன்ஸ் வோங் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை