புதுடில்லி, நவம்பர்.25-
இந்தியாவில் நாடு முழுவதும் விமான போக்குவரத்து சீராக உள்ளது. எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு குறித்து கவலைப்பட எதுவும் இல்லை என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி பல ஆண்டுகள் கழித்து வெடித்துச் சிதறி வருகிறது. இதன் எதிரொலியாக வானில் சுமார் 14 கிமீ உயரத்துக்கு எரிமலை சாம்பலும், புகையும் சூழ்ந்துள்ளது. இவை வான்வெளியில் கலந்து காற்றின் போக்கில் நகர்வதால், அதன் தாக்கம் இந்தியா, சீனா வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த வான்வெளியில் விமானங்கள் இயக்குவதை தவிர்க்குமாறு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியது. அதையேற்று சில விமான நிறுவனங்களின் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.








