Apr 22, 2026
Thisaigal NewsYouTube
மஹாராஷ்டிராவில்  ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி
உலகச் செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி

Share:

மும்பை, ஜூன்.03-

மஹாராஷ்டிராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நீரில் மூழ்கி ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் இந்திராவதி ஆறு உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த குழந்தைகள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தைகள் ஆறு பேர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், நீரில் மூழ்கிய குழந்தைகள் ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். ஆற்றில் குளித்த குழந்தைகளுக்கு நீச்சல் தெரியவில்லை. ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related News

ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு: சேட்ஜிபிடி 'உடந்தையாக' இருந்ததா? குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு: சேட்ஜிபிடி 'உடந்தையாக' இருந்ததா? குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

தமிழகத் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி: திமுக அரசைச் சாடினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தமிழகத் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி: திமுக அரசைச் சாடினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

அமெரிக்காவில் பயங்கரம்: பதின்ம வயதினர் மோதலில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, ஐவர் காயம்!

அமெரிக்காவில் பயங்கரம்: பதின்ம வயதினர் மோதலில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, ஐவர் காயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை