Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் குடியிருப்புப் பகுதியில் தீ: ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்

Share:

சிங்கப்பூர், ஜன.26-

சிங்கப்பூரில் Punggol எனுமிடத்தில் வீடமைப்புப் பகுதியொன்றில் தீ பரவியதை அடுத்து ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். சுமார் 60 குடியிருப்புவாசிகள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். Punggol, Sengkang, Tampines தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதாக சிங்கப்பூர் பொது தற்காப்புப் படை தெரிவித்தது.

ஏழு மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து கரும் புகை வெளியேறியுள்ளது. வீடு ஒன்றில் இருந்த படுக்கையறையில் இருந்து தீ முதலில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நால்வர் உடனடியாக வெளியேறிவிட்டனர். மற்றவர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர்.

அத்தீச் சம்பவத்தில் கரும் புகையைச் சுவாசித்த காரணத்தால் மூச்சுத் திணறிய ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். படுக்கையறையில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தீ பரவியிருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை