நேற்று ஏப்ரல் 19, 2026, அதிகாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், 1 முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் ஷாமர் எல்கின்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் கொல்லப்பட்டவர்களில் ஏழு குழந்தைகள் அவருடைய சொந்தக் குழந்தைகள் என்றும், மற்றொரு குழந்தை உறவினர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் குழந்தைகளின் தாய் உட்பட இரு பெண்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தாக்குதலுக்குப் பிறகு காரில் தப்பியோடிய சந்தேக நபரை காவல்துறையினர் துரத்திச் சென்ற நிலையில், நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தத் துயரம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று வீடுகளில் பரவியிருந்த இந்த ரத்தக் கறை படிந்த குற்றக் காட்சியைப் பார்த்த காவல்துறை அதிகாரிகளே நிலைகுலைந்து போயுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஸ்ரீவ்போர்ட் நகர மேயர் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சன் ஆகியோர் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.








