Oct 21, 2025
Thisaigal NewsYouTube
மலை உச்சியில் இருந்தும், ஆற்றிலும் தள்ளி விடப்படும் மாடுகள் - மத்திய பிரதேசத்தில் ஏன் இப்படி செய்கிறார்கள்?
உலகச் செய்திகள்

மலை உச்சியில் இருந்தும், ஆற்றிலும் தள்ளி விடப்படும் மாடுகள் - மத்திய பிரதேசத்தில் ஏன் இப்படி செய்கிறார்கள்?

Share:

செப்டம்பர் 03-

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் மாடுகளை வலுக்கட்டாயமாக மூழ்கடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்துள்ளது. மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலானதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பம்ஹூர் என்ற பகுதியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில், வெள்ளம் கரைபுரளும் ஆற்றுக்குள் மாடுகள் விரட்டப்படுவதும், அவை நீரில் அடித்துச் செல்லப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வேகமான நீரோட்டத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லும் பல மாடுகள் தடுப்பணையை நோக்கி விழுகின்றன.

பல மாடுகளின் கால்கள் முறிந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 மாடுகள் ஆற்றில் தள்ளிவிடப்பட்டதாகவும், அவற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

முழுமையான விசாரணைக்கு பின்னரே சரியான எண்ணிக்கை தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துணைப் பிரிவு காவல் அதிகாரி (எஸ்டிபிஓ) நாகவுட் விடிதா தாகர் கூறுகையில், "தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை ரயில்வே பாலத்திற்கு அடியில் ஆற்றுக்குள் சிலர் தள்ளி விட்டதாக தகவல் கிடைத்தது." என்றார்.

மேலும், "சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் அதே இடத்தில் வசிப்பவர்கள். ஒரு சிறுவன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்றார்.

கைது செய்யப்பட்ட பீட்டா பக்ரி, ரவி பக்ரி மற்றும் ராம்பால் சவுத்ரி ஆகிய மூவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் 4/9 பசு வதைத் தடைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சந்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 325 (3/5) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News