Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இடை நிறுத்தம் செய்தது தாய்லாந்து
உலகச் செய்திகள்

கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இடை நிறுத்தம் செய்தது தாய்லாந்து

Share:

பாங்கோக், நவம்பர்.10-

கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் முன்னிலையில் கம்போடியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை நிறுத்தி வைத்துள்ளதாக தாய்லாந்து இன்று அறிவித்துள்ளது.

தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நில வெடி சம்பவத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூரில் கம்போடியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul அறிவித்துள்ளார்.

ஆகக் கடைசியாக நிகழ்ந்த இந்த நில வெடிச் சம்பவம் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வி அடையும் அளவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி