Apr 21, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இடை நிறுத்தம் செய்தது தாய்லாந்து
உலகச் செய்திகள்

கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இடை நிறுத்தம் செய்தது தாய்லாந்து

Share:

பாங்கோக், நவம்பர்.10-

கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் முன்னிலையில் கம்போடியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை நிறுத்தி வைத்துள்ளதாக தாய்லாந்து இன்று அறிவித்துள்ளது.

தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நில வெடி சம்பவத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூரில் கம்போடியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul அறிவித்துள்ளார்.

ஆகக் கடைசியாக நிகழ்ந்த இந்த நில வெடிச் சம்பவம் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வி அடையும் அளவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!