Jun 17, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து Paetongtarn Shinawatra நீக்கம்
உலகச் செய்திகள்

தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து Paetongtarn Shinawatra நீக்கம்

Share:

பாங்காக், ஜூலை,01-

தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றம், Paetongtarn Shinawatra- வை, பிரதமர் பதவியிலிருந்து இன்று தற்காலிகமாக நீக்கியுள்ளது.

38 வயது Shinawatra , அண்மையில், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சன்னிடம் தொலைப்பேசியில் பேசியிருந்தார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்தச் சர்ச்சையால் Shinawatra பதவிக்கும் ஆட்சிக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த Shinawatra வை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பினர்.

இதையடுத்து 36 செனட் உறுப்பினர்கள் தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவில் Shinawatra நேர்மை இல்லாமல் நடந்து கொண்டார், தெரிந்தே சட்டத்தை மீறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவரை பிரதமர் பதவிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை