Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் பலி
உலகச் செய்திகள்

ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் பலி

Share:

சனா, செப்டம்பர்.11-

ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.

மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

குறிப்பாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதலை நடத்தினர்.

இதற்கு பதிலடியாக, ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 130க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

Related News