Aug 13, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

ஏர் இந்தியா விமானச் சேவை தற்காலிகமாகக் குறைப்பு

Share:

புதுடெல்லி, ஜூன்.23-

'ஏர் இந்தியா' விமான நிறுவனம், அனைத்துலக அளவில் இயக்கி வரும் 19 வழித்தட விமானங்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாக குறைக்க உள்ளதாகவும்; மூன்று வழித்தடத்தில் விமான சேவைகளை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், அனைத்துலக அளவில் இயங்கி வரும் பெரிய விமானங்களை 15 சதவீதம் குறைப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது 19 அனைத்துலக வழித்தடங்களில் இயக்கி வரும் 118 வாராந்திர சிறிய விமானங்களை 5 சதவீதம் அளவுக்குத் தற்காலிகமாக குறைத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பெங்களூரு - சிங்கப்பூர், புனே - சிங்கப்பூர் மற்றும் மும்பை - மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா ஆகிய மூன்று வழித்தட சேவைகளை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. உள்நாட்டு சேவையான டில்லி - பெங்களூரு, டில்லி - மும்பை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களின் சேவையும் குறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என ஏர் - இந்தியா தெரிவித்துள்ளது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு