Apr 19, 2026
Thisaigal NewsYouTube
கேகேஆர் இன்னும் 3 டிராபிகளை வெல்ல வேண்டும் – கவுதம் காம்பீர்
உலகச் செய்திகள்

கேகேஆர் இன்னும் 3 டிராபிகளை வெல்ல வேண்டும் – கவுதம் காம்பீர்

Share:

இந்தியா, மே 31-

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்ற நிலையில் இன்னும் 3 டிராபிகளை வெல்ல வேண்டும் என்று ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது. இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 14 லீக் போட்டிகளில் 9ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலேயே இருந்தது.

அடுத்து நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியானது 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை வென்றது. கொல்கத்தா 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் காம்பீர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டிராபியை வென்றது குறித்து பேசிய கவுதம் காம்பீர் கூறியிருப்பதாவது: இன்னும் 3 டிராபி வெல்ல வேண்டும். அப்போது தான் அதிக முறை டிராபி வென்ற அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திகழும் என்று காம்பீர் கூறியுள்ளார். இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரது கேப்டன்ஷி மிக சிறப்பாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு