Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள்
உலகச் செய்திகள்

ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள்

Share:

நாட்டின் மத்திய பிராந்தியத்தில் குறைந்தது 115 பேர் படுகொலை செய்யப்பட்டு, ஒரு வாரத்துக்குள், துப்பாக்கிதாரிகள், ஹெய்ட்டியின் தலைநகருக்கு வடக்கே மற்றொரு நகரத்தை ஆக்கிரமித்து, தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது, மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்களை நடத்திய அவர்கள், வீடுகளுக்கு தீ வைத்தனர். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை.

கடலோர நகரமான அர்காஹேயில் வசிப்பவர்கள் வானொலி நிலையங்களுக்கு அழைப்பு விடுத்து உதவிக்காக கெஞ்சுகின்றனர்.

அத்துடன், பொலிஸார் வந்து தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வன்முறை குழுக்கள்

துப்பாக்கிதாரிகள் விடியற்காலையில் நகரத்தைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பல வானொலி நிலையங்கள் தலிபான் என்று அழைக்கப்படும் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இந்த குழு, சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்டு, தலைநகரின் வடக்குப் பகுதியில் செயல்படுகிறது. இதேவேளை மற்றுமொரு குழு கடந்த வியாழனன்று நாட்டின் மத்திய பிரதேசம் ஒன்றில் நடத்திய தாக்குதலில், 115இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஹெய்ட்டியின் தலைநகர் பகுதிகளில் பல்வேறு துப்பாக்கத்தாரிகளின் வன்முறை குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு