Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள்
உலகச் செய்திகள்

ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள்

Share:

நாட்டின் மத்திய பிராந்தியத்தில் குறைந்தது 115 பேர் படுகொலை செய்யப்பட்டு, ஒரு வாரத்துக்குள், துப்பாக்கிதாரிகள், ஹெய்ட்டியின் தலைநகருக்கு வடக்கே மற்றொரு நகரத்தை ஆக்கிரமித்து, தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது, மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்களை நடத்திய அவர்கள், வீடுகளுக்கு தீ வைத்தனர். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை.

கடலோர நகரமான அர்காஹேயில் வசிப்பவர்கள் வானொலி நிலையங்களுக்கு அழைப்பு விடுத்து உதவிக்காக கெஞ்சுகின்றனர்.

அத்துடன், பொலிஸார் வந்து தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வன்முறை குழுக்கள்

துப்பாக்கிதாரிகள் விடியற்காலையில் நகரத்தைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பல வானொலி நிலையங்கள் தலிபான் என்று அழைக்கப்படும் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இந்த குழு, சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்டு, தலைநகரின் வடக்குப் பகுதியில் செயல்படுகிறது. இதேவேளை மற்றுமொரு குழு கடந்த வியாழனன்று நாட்டின் மத்திய பிரதேசம் ஒன்றில் நடத்திய தாக்குதலில், 115இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஹெய்ட்டியின் தலைநகர் பகுதிகளில் பல்வேறு துப்பாக்கத்தாரிகளின் வன்முறை குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை