ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மூன்று மீட்டர் உயரத்திற்கு சுனாமி- பேரலை எழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஜப்பானியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், மாலை 4.53 மணியளவில் வடக்கு இவாடே மாநிலத்தின் பசிபிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் தோக்கியோ வரை உணரப்பட்டதுடன், அங்குள்ள பிரம்மாண்டமான கட்டிடங்கள் பலமாக அதிர்ந்தன. சுனாமி அலைகள் கரையைத் தாக்கக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








