Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவுக்கான 50 சதவீத வரி
உலகச் செய்திகள்

இந்தியாவுக்கான 50 சதவீத வரி

Share:

வாஷிங்டன், ஆகஸ்ட்.23-

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி ஆகஸ்ட் 27ல் நிச்சயம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1ல் 25 சதவீத வரி விதித்தார். அதை தொடர்ந்து இரண்டாம் நிலை வரி என்ற பெயரில் கூடுதலாக 25 சதவீத வரி விதித்து அதிர வைத்தார். இந்த இரண்டாம் நிலை வரி ஆகஸ்ட் 27ல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இது அமலுக்கு வந்தால் இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படும். இதை குறைப்பது பற்றி பேச்சு நடத்த அமெரிக்க வர்த்தக குழுவினர் கடந்த வாரம் இந்தியா வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் போர் நிறுத்த பேச்சில் கடந்த வாரம் ஈடுபட்டார். இதனால் இந்தியாவுக்கான வரி குறைக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

ஆனால் அதை மறுக்கும் வகையில் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தேவையே இல்லை. அவர்கள் தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் லாபத்திற்காக வாங்குகிறார்கள். இதனால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இந்த ரத்த கறையில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளது.

அதே போல் அமெரிக்காவிடம் அதிக பொருட்களை விற்கும் இந்தியா, எங்களிடம் இருந்து எதையும் வாங்குவதில்லை. சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடன் நெருக்கம் காட்டுகின்றனர்.

எனவே இந்தியாவுக்கான இரண்டாம் நிலை வரி விதிப்பு நீட்டிக்கப்படாது. ஆகஸ்ட் 27ல் வரி அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை