Apr 17, 2026
Thisaigal NewsYouTube
வன்மத்தின் உச்சம்.. இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதிக்காத மாலத்தீவு அதிபர்! பறிபோன சிறுவன் உயிர்
உலகச் செய்திகள்

வன்மத்தின் உச்சம்.. இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதிக்காத மாலத்தீவு அதிபர்! பறிபோன சிறுவன் உயிர்

Share:

மாலி: இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே தற்போது மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் உயிருக்கு போராடிய 14 வயது சிறுவன் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலியான ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடாக தீவுத்தேசமான மாலத்தீவு உள்ளது. அளவில் சிறிதாக இருந்தாலும் கூட தற்போது மாலத்தீவு இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அங்கு நடந்த அதிபர் தேர்தலுக்கு பிறகே இந்தியாவிடம் மாலத்தீவு மோத தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு வெற்றி பெற்றார். இவர் சீனா ஆதரவாளர். அதோடு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். இதனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேறும்படி அவர் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் லட்சத்தீவுக்கு சென்று போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

இது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி இருந்தது. மாலத்தீவின் சுற்றுலாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி போட்டோ போட்டதாக கூறி மாலத்தீவின் எம்பிக்கள், அமைச்சர்கள் வன்மத்தை கக்கினர். அதோடு இந்தியர்களை தரக்குறைவாக விமர்சித்தனர். இது பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலாவை ரத்து செய்தனர். இதனால் மாலத்தீவின் வருமானம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

இதையடுத்து சீனாவில் இருந்து அதிகளவில் மக்களை சுற்றுலாவுக்கு அனுப்ப வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெஞ்சினார். இப்படியாக இந்தியா-மாலத்தீவு இடையே மோதல் என்பது நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியா வழங்கிய விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் அனுமதி வழங்காத நிலையில் அங்குள்ள 14 வயது சிறுவனின் உயிர் பறிப்போய் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

Related News

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!