Apr 17, 2026
Thisaigal NewsYouTube
"போர் நிறுத்தம்" செய்ய ரெடி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்! உற்று பார்க்கும் காசா
உலகச் செய்திகள்

"போர் நிறுத்தம்" செய்ய ரெடி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்! உற்று பார்க்கும் காசா

Share:

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திடீரென கூறிய சில கருத்துகள் இப்போது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்தே வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் சரமாரி தாக்குதல் நடத்தியது. ஏவுகணை தாக்குதல் தொடங்கிப் பல வகை தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

இதையடுத்து இஸ்ரேல் பதிலடியில் இறங்கியது. காசா மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அடுத்த கட்டமாக முழு வீச்சில் தாக்குதலையும் தொடங்குகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்தம்: இப்படிக் காசா மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகை செய்யும் வகையில் இஸ்ரேலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றே இஸ்ரேல் கூறி வந்தது.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!