Apr 16, 2026
Thisaigal NewsYouTube
வாலிபர் தற்கொலை செய்த விவகாரம்: சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி
உலகச் செய்திகள்

வாலிபர் தற்கொலை செய்த விவகாரம்: சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி

Share:

திருவனந்தபுரம், ஜனவரி.28-

கேரளா, கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் (41) என்ற வாலிபர் ஓடும் பஸ்சில் வைத்து தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி ஷிம்ஜிதா முஸ்தபா (35) என்ற இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன் தான் எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வெளியான மறுநாளே வாலிபர் தீபக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீபக்கின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றமொன்றில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஷிம்ஜிதாவின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!