Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் வெள்ளம்: 120,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share:

ஜகார்த்தா, மார்ச்.05-

இந்தோனேசியாவில் ஜகார்த்தா, போகோர் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் 120, 000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, உணவு விநியோகம், அவசர உதவிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பத்து மாவட்டங்களில் 18 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெக்காசி, பண்தேன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. வெள்ளத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வெள்ளத் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளும் அவற்றில் அடங்கும்.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை