இஸ்ரேல்: இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு உடலை நிர்வாணமாக எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்த பெண் யார்? என்பது குறித்து இதயத்தை நொறுங்க வைக்கும் உருக்கமான தகவலை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணைகளை ஹமாஸ் ஏவி தாக்குதல் நடத்தியது.
மேலும் இஸ்ரேலின் எல்லையில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் வாகனங்களில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் பராசூட் உதவியுடனும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
இதனால் கடந்த 7 ம் தேதி மட்டும் இஸ்ரேலில் 1,400 பேர் வரை பலியாகினர். அதோடு 230 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவுக்கு பிடித்து சென்றனர். இதையடுத்து தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக கூறி காசா மீது தாக்குதலை தொடங்கினார்.
இதன்மூலம் இருதரப்புக்கும் இடையே 25 நாட்களை கடந்து போர் நடந்து வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாக காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.