Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்
உலகச் செய்திகள்

இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்

Share:

புதுடில்லி, ஆகஸ்ட்.21-

இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்குவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், முன்னேற்றம் அபரிமிதமானது. 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை செய்த பணிகளை விட 2015 முதல் 2025ல் இஸ்ரோ கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பணிகளை முடித்து உள்ளது. கடந்த ஆறு மாதங்களில், மூன்று முக்கியமானப் பயணங்கள் முடிக்கப்பட்டன.

ஆக்ஸியம் 4 பணி மிகவும் மதிப்பு மிக்கப் பணியாகும். இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு பூமி திரும்பிய முதல் இந்தியர் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளார். அடுத்த 2-3 மாதங்களில், மற்றொரு நாசா-இஸ்ரோ பணி தொடங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, எங்களிடம் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மட்டுமே இருந்தது. இன்று, விண்வெளித் துறையில் 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களால் இரண்டு துணை சுற்றுப்பாதை பணிகள் செய்யப்படுகின்றன.


அமெரிக்காவின் 6,500 கிலோ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளன. இன்று வரை, 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளன. இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும் என நாராயணன் கூறினார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை