Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஆசியா விமானத்தில் கோளாறு: சென்னையில் அவசரத் தரையிறக்கம்
உலகச் செய்திகள்

ஏர் ஆசியா விமானத்தில் கோளாறு: சென்னையில் அவசரத் தரையிறக்கம்

Share:

சென்னை, ஆகஸ்ட். 15-

கோலாலம்பூரில் இருந்து 158 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் கேரளா, கோழிக்கோடு நோக்கிப் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் ஒன்று, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சென்னை வான்வெளியில் ஏர் ஆசியா விமானம் பறந்த கொண்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி அறிந்தார்.

உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட அவர், அவசரமாக விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினார். அவர்களும் அனுமதி கொடுத்த நிலையில், விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால், விமானப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து, அவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிறகு, விமானத்தில் கோளாறு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்பப் பிரச்னை சரி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இன்று மாலை விமானம் கோழிக்கோடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை