Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா உட்பட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கங்கள்
உலகச் செய்திகள்

இந்தியா உட்பட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கங்கள்

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.13-

இந்தியா, மியான்மார் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள விவரம் வெளியாகியுள்ளது. உள்ளது. மியான்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் சுவடு இன்னமும் மறையவில்லை. ரிக்டரில் 7.7 ஆக பதிவான அந்நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்ததோடு, பலர் வீடுகள், உடமைகளை இழந்தனர்.

இந்நிலையில் மியான்மரின் மெய்க்டில்லா நகரத்தில் இன்று 5.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து தத்தம் இருப்பிடங்களில் இருந்து உடனடியாக வெளியேறினர். இதே போல, இமாச்சல பிரதேசம் மண்டியில் 3.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அந்நாட்டில் 2 நிலநடுக்கங்கள் முறையே 6.1 மற்றும் 3.9 என்ற ரிக்டரில் பதிவாகி உள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் ஆசிய நாடுகளில் மொத்தம் 4 நிலநடுக்கங்கள் பதிவாகின.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை