பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3-வது மாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
காசா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு, மத்திய, தெற்கு காசா என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.