Apr 19, 2026
Thisaigal NewsYouTube
கனடாவை அதிரவைத்த தங்கத்திருட்டு, இலங்கையர் உட்பட 9 பேர் ஒருவருடத்தின் பின் கைது
உலகச் செய்திகள்

கனடாவை அதிரவைத்த தங்கத்திருட்டு, இலங்கையர் உட்பட 9 பேர் ஒருவருடத்தின் பின் கைது

Share:

கனடா, ஏப்ரல் 19-

டொராண்டோ பியர்சன் விமான நிலையதில் இடம்பெற்ற தங்க திருட்டு தொடர்பாக நேற்றைய தினம் ஏர் கனடா ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை நிலையம் தெரிவித்துள்ளது.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொள்ளைச்சம்பவத்தில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழர் ஒருவரும் அடங்குகின்றார்.

புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் கூறினர் .

ப்ராஜெக்ட் 24 k (project 24 k) என்று அழைக்கப்படும் இந்த கூட்டுத் திருட்டு24 கரட் தங்கத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

அந்த வகையில் சுமார் 01 வருட காலத்திற்கு முன்னர் பியர்சன் விமானநிலையத்தில் வைத்து சுமார் 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 400 kg எடைகொண்ட 6600 தங்க கட்டிகள் 09 பேர் கொண்ட குழுமூலம் கொள்ளையடிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து நேற்று குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் பொலிஸாரால் அடையாளம் காணப்படுள்ளனர் .இதில் தமிழர் ஒருவர் இடம்பெறுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

37 வயதான பிரசாத் பரமலிங்கம் என்பவரே குறித்த திருட்டில் பங்கேற்றதாக சந்தேகத்தின் அடிப்படிடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது துப்பாக்கி கடத்தல்கள் ஆயுத விநியோகங்கள் தொடர்பாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன .

இவர் மட்டுமல்லாமல் இவருடன் கூட்டாளிகளாக ட்ரொண்டோ ,ப்ராம்ப்டன் மற்றும் ஓக்வில்லே போன்ற பிரதேசங்களைசேர்ந்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

திருட்டு நடந்த நேரத்தில் விமான நிறுவனத்தில் பணிபுரியும் அர்சலன் சவுத்ரி, குரோவர் ஆகியோருக்கு கனடா முழுவதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது .எனினும் அவர்கள் இருவரும் சிக்கிக்கொள்ளவில்லை.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு