Jun 22, 2026
Thisaigal NewsYouTube
கனடாவை அதிரவைத்த தங்கத்திருட்டு, இலங்கையர் உட்பட 9 பேர் ஒருவருடத்தின் பின் கைது
உலகச் செய்திகள்

கனடாவை அதிரவைத்த தங்கத்திருட்டு, இலங்கையர் உட்பட 9 பேர் ஒருவருடத்தின் பின் கைது

Share:

கனடா, ஏப்ரல் 19-

டொராண்டோ பியர்சன் விமான நிலையதில் இடம்பெற்ற தங்க திருட்டு தொடர்பாக நேற்றைய தினம் ஏர் கனடா ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை நிலையம் தெரிவித்துள்ளது.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொள்ளைச்சம்பவத்தில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழர் ஒருவரும் அடங்குகின்றார்.

புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் கூறினர் .

ப்ராஜெக்ட் 24 k (project 24 k) என்று அழைக்கப்படும் இந்த கூட்டுத் திருட்டு24 கரட் தங்கத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

அந்த வகையில் சுமார் 01 வருட காலத்திற்கு முன்னர் பியர்சன் விமானநிலையத்தில் வைத்து சுமார் 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 400 kg எடைகொண்ட 6600 தங்க கட்டிகள் 09 பேர் கொண்ட குழுமூலம் கொள்ளையடிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து நேற்று குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் பொலிஸாரால் அடையாளம் காணப்படுள்ளனர் .இதில் தமிழர் ஒருவர் இடம்பெறுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

37 வயதான பிரசாத் பரமலிங்கம் என்பவரே குறித்த திருட்டில் பங்கேற்றதாக சந்தேகத்தின் அடிப்படிடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது துப்பாக்கி கடத்தல்கள் ஆயுத விநியோகங்கள் தொடர்பாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன .

இவர் மட்டுமல்லாமல் இவருடன் கூட்டாளிகளாக ட்ரொண்டோ ,ப்ராம்ப்டன் மற்றும் ஓக்வில்லே போன்ற பிரதேசங்களைசேர்ந்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

திருட்டு நடந்த நேரத்தில் விமான நிறுவனத்தில் பணிபுரியும் அர்சலன் சவுத்ரி, குரோவர் ஆகியோருக்கு கனடா முழுவதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது .எனினும் அவர்கள் இருவரும் சிக்கிக்கொள்ளவில்லை.

Related News

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

அமெரிக்கா - இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரதமர் மோடியை 'தேவதூதர், கில்லர்' என டிரம்ப் வர்ணனை

அமெரிக்கா - இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரதமர் மோடியை 'தேவதூதர், கில்லர்' என டிரம்ப் வர்ணனை