Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மன்னிப்புக் கோரியது இண்டிகோ விமான நிறுவனம்
உலகச் செய்திகள்

மன்னிப்புக் கோரியது இண்டிகோ விமான நிறுவனம்

Share:

புதுடில்லி, டிசம்பர்.11-

இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, நாடு தழுவிய நிலையில் விமானச் சேவைப் பாதிப்புகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பயணிகளிடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளது.

பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய இயலாமல் போனதற்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது மற்றும் கட்டண விலக்கு போன்ற நிவாரண நடவடிக்கைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பெரிய இடையூறுகளுக்கான காரணத்தைக் கண்டறிய வெளிப்புற தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு, வாரியம் ஆராய்ந்து வருவதாக விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை