Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மன்னிப்புக் கோரியது இண்டிகோ விமான நிறுவனம்
உலகச் செய்திகள்

மன்னிப்புக் கோரியது இண்டிகோ விமான நிறுவனம்

Share:

புதுடில்லி, டிசம்பர்.11-

இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, நாடு தழுவிய நிலையில் விமானச் சேவைப் பாதிப்புகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பயணிகளிடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளது.

பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய இயலாமல் போனதற்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது மற்றும் கட்டண விலக்கு போன்ற நிவாரண நடவடிக்கைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பெரிய இடையூறுகளுக்கான காரணத்தைக் கண்டறிய வெளிப்புற தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு, வாரியம் ஆராய்ந்து வருவதாக விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா