Apr 21, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை தொடரும்
உலகச் செய்திகள்

கம்போடியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை தொடரும்

Share:

பேங்காக், டிசம்பர்.13-

கம்போடியாவிற்கு எதிராக தங்களின் இராணுவ அதிரடி நடவடிக்கை தொடரும் என்று தாய்லாந்து இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தாய்லாந்தும் கம்போடியாவும் சர்ச்சைக்குரிய எல்லையில் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இருந்த போதிலும், சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு ஏற்பட்டதாக அறிவித்த பின்னரும், தாய்லாந்து தனது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ளது.

தாய்லாந்து இராணுவம் கம்போடிய நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

சண்டைகள் இரு தரப்பிலும் எல்லை மாநிலங்களைப் பாதித்துள்ளன. மேலும் சுமார் அரை மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

Related News

கம்போடியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை தொடரும் | Thisaigal News