Mar 13, 2026
Thisaigal NewsYouTube
"தனியா இருக்க போரடிக்குது.." போலீசுக்கு எமர்ஜென்சி கால் போட்ட பெண்.. அதுவும் 2,700 முறை..!
உலகச் செய்திகள்

"தனியா இருக்க போரடிக்குது.." போலீசுக்கு எமர்ஜென்சி கால் போட்ட பெண்.. அதுவும் 2,700 முறை..!

Share:

பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தனிமை என்பது எப்போதுமே ரொம்ப கொடியது. தனிமை காரணமாக மனச்சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவில் குடும்ப அமைப்பு வலுவாக இருப்பதால் தனிமையால் ஏற்படும் பிரச்சினை இங்குக் குறைவு.

ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை. தனிமையால் ஏற்படும் குற்றங்களும்.. இதனால் ஏற்படும் உளவியல் நோய்களும் அங்கே ரொம்ப அதிகம்.. அப்படி தனிமையில் இருந்த பெண் ஒருவர் செய்த காரியம் நெட்டிசன்களை வாயடைக்க வைத்துவிட்டது.

இந்தச் சம்பவம் ஜப்பான் நாட்டில் நடந்துள்ளது. அங்கே ஜப்பானில் கடந்த 2.9 ஆண்டுகளில் மட்டும் பெண் ஒருவர் போலியான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார். அதுவும் ஏதோ ஓரிரு முறை இல்லை... மொத்தம் 2,761 முறை தவறான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் 51 வயது பெண் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோ நகரில் வசித்து வரும் பெண் ஹிரோகோ ஹடகாமி.. 51 வயதான இந்தப் பெண் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். உள்ளூர் தீயணைப்புத் துறையைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அவசரக் காரணங்களைக் கூறி அவர் தனது வீட்டிலிருந்தும் அண்டை வீடுகளில் இருந்தும் பல முறை பலமுறை அழைப்புகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மே 2023 வரை வயிற்று வலி, கால் வலி என பல்வேறு காரணங்களை சொல்லி ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கேட்டு வரிசையாகக் கால் செய்துள்ளார்.

Related News

சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு பொதுமக்கள் ஆதரவு: போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடும் நிலைப்பாடு தொடரும்

சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு பொதுமக்கள் ஆதரவு: போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடும் நிலைப்பாடு தொடரும்

கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஈரானிடம் மன்னிப்பு கோரியது தாய்லாந்து

கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஈரானிடம் மன்னிப்பு கோரியது தாய்லாந்து

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!